Wipro நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – 15% வரைக்கும் சம்பள உயர்வு!
விப்ரோ நிறுவனத்தில் அட்ரிசன் விகிதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஊழியர்களுக்கு 15% வரைக்கும் சம்பள உயர்வு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தொடர்ந்து பணியாட்களை பணியமர்த்தி கொண்டிருக்கிறது. அதிலும், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தான் விப்ரோ நிறுவனத்தில் அட்ரிசன் விகிதம் உயர்ந்துவிட்டது. தொடர்ந்து அட்ரிசன் விகிதம் உயர்த்தப்படுவதால் விப்ரோ நிறுவனம் மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால், அட்ரிசன் விகிதத்தை ஓரளவுக்கு குறைக்கலாம் எனவும் திட்டமிட்டுள்ளது. இந்த அட்மிசன் விகிதத்தை கட்டுக்குள் வைப்பதற்காக அவ்வப்போது விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விப்ரோ நிறுவன ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் சம்பள உயர்வு அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக தற்போது வரைக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஊழியர்களுக்கு அளிக்கப்படும் வேரியபில் பே காரணமாக மார்ஜின் அழுத்தமும் இருப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டில் 18.8% ஆக இருந்த மார்ஜின் விகிதம் தற்போது 15% ஆக குறைந்துள்ளது.
Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும், விப்ரோ நிறுவனத்தில் அட்ரிஷன் விகிதத்தை குறைக்கவும், ஊழியர்களை தக்கவைத்து கொள்ளவும் ஒவ்வொரு காலாண்டிலும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதத்தில் ஊழியர்களுக்கு 10% வரைக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும், சிறப்பான ஊழியர்களுக்கு 15% க்கும் அதிகமாக சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்