விஜய் டிவி பிரபல சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ‘வைதேகி காத்திருந்தாள்’ மீண்டும் ஒளிபரப்பு!
ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வைதேகி காத்திருந்தாள் எனும் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்ப சீரியல் குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.
வைதேகி காத்திருந்தாள்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வைதேகி காத்திருந்தாள் சீரியல் மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வந்தது. வைதேகி காத்திருந்தாள் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த பிரஜன் படவாய்ப்பின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார்.
ExamsDaily Mobile App Download
அதாவது பிரஜன் ஏற்கனவே இந்த சீரியலில் ஒப்பந்தம் ஆவதற்கு முன்பாகவே பட வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் இரண்டையும் சமாளித்து விடலாம் என்கிற தைரியத்தில் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நாளடைவில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என நினைத்து வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து விலகியுள்ளார். வைதேகி காத்திருந்தாள் சீரியலில் முன்னா என்கிற நடிகர் பிரஜன் கதாபாத்திரத்தில் நடிக்க அறிமுகமானார். இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜபார்வை என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு எபிசோட் தொகுத்து வழங்க பிரியங்காவிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? லீக்கான தகவல்!
முன்னா சீரியலில் நடிக்க அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒரு வாரத்திலேயே வைதேகி காத்திருந்தாள் சீரியலை சீரியல் குழுவினர்கள் ஒளிபரப்பவில்லை. இதற்காக ஏன் சீரியலை ஒளிபரப்பவில்லை என ரசிகர்களின் மத்தியில் இருந்து கேட்டபோது டிஆர்பி குறைவான மதிப்பெண் பெற்றதால் அந்த சீரியலை நிறுத்தி விட்டதாக தகவல் பரவி வந்தன. இதற்குப் பிறகு கிட்டத்தட்ட 67 நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் வைதேகி காத்திருந்தாள் சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், விஜய் தொலைக்காட்சியில் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் ஒளிபரப்பவில்லை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.