தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மே 13, 20, 27 ஆகிய மூன்று நாட்களும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை வாய்ப்பை தேடி வருபவர்கள் இம்முகாமில் சேர்ந்து பயன் பெறலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலை இழந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் நம் மாநிலத்தில் வேலை வாய்ப்பு என்பது அரிதான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. அதிலும் கொரோனா அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு போன்றவற்றால் பணியில் இருந்தோர் தங்களின் வேலைகளை இழக்க வேண்டிய நிலை உருவானது. தொழில் சரிவினால் ஏராளமான நிறுவனங்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தது. அதனால் பணியாளர்களுக்கு ஊதியம் தர முடியாததால் பணியை விட்டு விலக்கியது.
Exams Daily Mobile App Download
இந்த நேரத்தில் மக்கள் மாத வருமானம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியது. இதன் விளைவாக பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்ததும் கடைகள் வணிக வளாகங்கள் திறக்க ஆரம்பித்தது. அப்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்தது. முதல் கட்டமாக தனியார் துறைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களை பொறுத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
HCL நிறுவனத்தில் பணிபுரிய ஆவலா? – B.E / B.Tech தேர்ச்சி போதும்..!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மே 13ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பி.இ., ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ படித்த வேலை தேடுவோர், செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இம்முகாமில் பங்கேற்கலாம். முகாம் மே 13,20,27 ஆகிய மூன்று தேதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் வேலை தேடுபவர்கள் சுய விவர குறிப்பு, கல்வித்தகுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.