ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் | IRCTC இ-வேலட் முறை அறிமுகம்!
இந்தியாவில் IRCTC தட்கல் முறைப்படி ரயிலின் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி புதிதாக வேலட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
IRCTC:
இந்தியாவில் ரயில் சேவை மக்களுக்கு அவசிய ஒன்றாக உள்ளது. கொரோனா மூன்றாம் அலையில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் ரயில்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அவசர வேலைகளுக்கு வெளியூர் செல்பவர்களால் உடனடி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் ரயில் பயணிகள் வசதிக்காக IRCTC இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அவசர காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் தட்கல் டிக்கெட்டை புக் செய்யலாம். அதனை தொடர்ந்து தற்போது ஐஆர்சிடிசி புதிதாக வேலட் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பணத்தை டெபாசிட் செய்து டிக்கெட்டுகளை மிக எளிதாக புக்கிங் செய்யலாம். டிக்கெட் முன்பதிவின் போது பணம் செலுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் ஐஆர்சிடிசி வேலட் முறையில் தவிர்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி! அரசு விளக்கம்!
- ரயில் டிக்கெட் புக் செய்ய நினைப்பவர்கள் முதலில் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு ஐஆர்சிடிசி கணக்கை லாகின் செய்ய வேண்டும்.
- அதில் Plan My Journey பேஜ்ஜில் என்பதில் IRCTC e-Wallet category என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்ததாக “IRCTC eWallet Registration” என்பதை கிளிக் செய்து அதில் உங்களின் ஆதார் கார்டு, பான் கார்டு விவரங்களை உள்ளிட வேண்டும்.
- முதல் முறையாக eWallet Register செய்பவர்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்