ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – ‘கவச்’ தொழில்நுட்பம் அறிமுகம்!
தமிழகத்தில் ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக கவச் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் விபத்து தடுக்கப்படுகிறது.
ரயில் விபத்து:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சற்று குறைய ஆரம்பித்ததும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயங்க தொடங்கியது. ஆனாலும் கொரோனா நோய் தொற்றை கருத்தில் கொண்டு அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் 2 ரயில்கள் விபத்துக்கு உள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காத மின்சார ரயில் நடைமேடையில் மோதி ரயில் விபத்திற்கு உள்ளானது. அதனை தொடர்ந்து மதுரை கூடல் நகரில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இது போன்ற ரயில் விபத்துகளை தடுக்க கவச் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 2012 முதல் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது தான் இந்த கவச் தொழில்நுட்பம். ரயில் இன்ஜின், சிக்னல் அமைப்பு, ரயில் நிலையம் ஆகியவற்றில் நிறுவப்படும் கவச் தொழில்நுட்பம், ஜிபிஎஸ் மற்றும் ரேடியோ அலைவரிசை மூலம் இயக்கப்படுகிறது.
அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட் – ஆன்லைனில் புதுப்பிக்க எளிய வழிமுறைகள்!
மேலும் இதில் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வரும்போது, ஓட்டுநர்களுக்கு ஆடியோ, வீடியோ மூலம் முதலில் எச்சரிக்கை விடுக்கிறது. கவச். ஓட்டுநர்களிடம் இருந்து அப்போதும் பதில் வராவிட்டால் தானாக வேகத்தை குறைத்து குறிப்பிட்ட தூரத்தில் ரயில்களை நிறுத்தி விடுவார்கள் ஆபத்தில் இருக்கும் போது அனுப்பப்படும் சிக்னலுக்கு ரயில் ஓட்டுநர் செயல்பட தவறினாலும், சிவப்பு சிக்னலை தாண்டியவுடன் தானாகவே பிரேக் போடும் இது தான் இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் ஆகும்.