ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொது முடக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. நோய் பரவல் வெகுவாக குறையத் தொடங்கியதை தொடர்ந்து தற்போது பொதுப் போக்குவரத்து மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் 12 விரைவு ரயில்களில் புதிய வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
புதிய வசதிகள்:
தமிழ்நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தது. மேலும் பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பொது மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணம் செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. அந்த வகையில் பொதுமக்கள் ரயில் சேவை இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன. இதனால் அனைத்து வித சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் – அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தமிழ் புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட பண்டிகைகள் வந்ததால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏராளமானோர் முன்பதிவு செய்தனர். இதனால் முக்கிய ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 300 ஐ கடந்து சென்றது. இதையடுத்து பயணிகளின் வசதிக்காக ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 12, 13, 14, மற்றும் 15 ஆகிய தேதிகளில் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து தெற்கு ரயில்வே இயக்கப்பட்டது. இதனால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த பயணிகளுக்கு பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 18, 19 மற்றும் 20ம் தேதிகளில் ராமேசுவரம்-எழும்பூர், மங்களூர்-எழும்பூர், எழும்பூர்-காரைக்கால், காரைக்கால்-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில், நாகர்கோவில்-தாம்பரம், மதுரை-சென்ட்ரல், துரந்தோ விரைவு ரயில் ஆகியவற்றில் படுக்கை வசதிகள் கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் மீண்டும் அமலாக உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்? அமைச்சரின் பேட்டி!
இதை தொடர்ந்து எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-ராமேஸ்வரம், தஞ்சாவூர்-எழும்பூர், சென்ட்ரல்- திருவனந்தபுரம் உள்ளிட்ட 12 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 20ம் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்பட இருக்கிறது. மேலும் கொல்லம்- எழும்பூர், குருவாயூர்- எழும்பூர் உட்பட 5 ரயில்களில் 21ம் தேதி வரை கூடுதலாக தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் எழும்பூர்-கொல்லம், எழும்பூர்-ராமேஸ்வரம், தஞ்சாவூர்-எழும்பூர், சென்ட்ரல்- திருவனந்தபுரம் உள்ளிட்ட 12 எக்ஸ்பிரஸ் ரயில்களில் 20ம் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி (எஸ்.எல்) இணைக்கப்பட உள்ளன. இந்த புதிய வசதிகளால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்வார்கள்.