ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – 12 வருடங்களுக்கு பின்னர் மதுரை – தேனி ரயில் சேவைகள்!
தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. தற்போது இது முடிவடைந்துள்ள நிலையில் பலமுறை ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று பிரதமர் மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு :
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் 1928ம் ஆண்டு போடி மற்றும் மதுரை இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் போடி, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டது. அதனால் மதுரை மற்றும் போடி இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
Exams Daily Mobile App Download
இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு 90.4 கி.மீ, மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து மதுரையிலிருந்து தேனி வரை பலமுறை ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் 3 பெட்டிகளுடன் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையிலும் ரயில் சேவைகள் இதுவரை இயக்கப்படவில்லை. மேலும் மதுரை-போடி ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
தமிழ் மொழி தகுதி தேர்வில் ‘இவர்களுக்கு’ விலக்கு – முக்கிய அரசாணை வெளியீடு!
அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து முதற்கட்டமாக மதுரை – தேனி இடையே ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பயண கட்டணமாக ரூ.45 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மதுரை – தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.