சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி அரசு பஸ் மூலம் ஊர் சுற்றலாம்!
தமிழகத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் பொதுமக்களின் தேவைக்கு இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு பஸ்
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலாத் தலங்களுக்கு பெயர் போனது. அங்கு அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூர் சிலையை காண ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் தினமும் வருவார்கள். வெளி மாவட்டங்கள், வெளி நாட்டினர், வெளி மாநிலத்தவர் என பலர் அங்கு வருகின்றனர். அவர்களுக்கு பயன்பெறும் வகையில் அனைத்து சுற்றுலா தலங்களையும் இணைத்து அரசு போக்குவரத்து கழக பஸ் இயக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அது தொடக்க விழாவோடு நின்று போனது.
தமிழக விசைத்தறி நெசவாளர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – 1000 யூனிட் இலவச மின்சாரம்!
மேலும் சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களை பயன்படுத்த முன்வரவில்லை என்பதால் இந்த நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அண்மையில் சிவாலய ஓட்டத்தையொட்டி 12 சிவன் கோயில்களை இணைத்து மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்கியது. அதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், இதன் அடுத்த கட்டமாக குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை இணைத்து அரசு பஸ் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முன்வந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள, மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனை, பேச்சிப்பாறை அணை போன்ற சுற்றுலா தலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. மொத்தம் 50 பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் தங்களின் ஊரில் இருந்தே பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ்களில் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கிளை மேலாளர் (வணிகம்)- 9487599082, கிளை மேலாளர் (நாகர்கோவில்)- 9487599085, கிளை மேலாளர் (கன்னியாகுமரி)- 9487599087 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த பஸ்களில் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணம் ரூ.300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download