TN TRB தேர்வு எழுதியவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. தேர்வுகள் நடைபெற்று முடிந்து தொடர்ச்சியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் தேர்வாணையம் (TRB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெறவில்லை. கொரோனா தாக்கத்திற்கு பிறகு 2021 – 2022 ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனை பூர்த்தி செய்யும் வண்ணம் தேர்வாணையம் தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
கடந்த 2021 செப்டம்பர் மாதம் வெளியான அறிவிப்பை தொடர்ந்து இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து திட்டமிட்டபடி கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் உடற்கல்வி இயக்குனர் நிலை — 1 மற்றும் கணினி பயிற்றுனர் நிலை – 1 பதவிகளுக்கான தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. சுமார் 190 தேர்வு மையங்களில் 2.30 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 4-ம் தேதி வெளியிடபட்டு சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது.
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்! முழு விபரங்கள் இதோ
இந்த நிலையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 2,207 காலிப்பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 இடங்கள் அதிகரித்து மொத்தம் 3,237 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்படும் என்றும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.