தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் - மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டசபையில் எம்எல்ஏ மணிக்கண்ணன் கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பிற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அதிகபட்ச மின் தேவையை நாம் இப்போது சமாளித்து வருவதால் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித மின்தடையும் இல்லை:

நாடு முழுவதும், கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் பொதுமக்களின் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் தேவை உச்சபட்சமாக 14 ஆயிரம் மெகாவாட் ஆக இருந்த நிலை மாறி இப்போது 17,500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் பயன்பாட்டில் உள்ளது. இது இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று முன்னதாக மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. மேலும் பல்வேறு வழிகளில் மின் உற்பத்தியை அதிகரித்து வருவதாகவும் கூறியிருந்தது. பெரும்பாலான வீடுகளில் மின்விசிறி, ஏ.சி, ரெப்ரிஜிரேட்டர் ஆகியவற்றை அதிகம் உபயோகப்படுத்துவது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இது குறித்து மின்சார வாரிய அதிகாரி கூறியது, கொரோனா வருகையால் கடந்த ஆண்டு கோடை காலத்தில் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் சரிவர செயல்படாத காரணத்தால் மின்சார தேவை மிக குறைவாகவே இருந்து வந்தது. குறிப்பாக வீடுகளில் மட்டும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதால் ஆயிரம் மெகாவாட்டுக்கு கீழே தேவை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை. கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதால் மின் சாதனங்களை பயன்படுத்தும் அனைத்து தொழில்களும் இயங்கி வருகிறது. இதன் காரணமாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே மின்சார தேவை அதிகரித்து விட்டது என தெரிவித்தார்.

ரெயில்டெல் கார்ப்பரேஷனில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை ரெடி..!

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் எந்த வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோடையில் மின்வெட்டு ஏற்படாதவாறு தமிழக மின்வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து மே 1-8 வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது. மேலும் ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களும், மே 9 வரை உச்சபட்ச மின்தேவை 16,000 மெகா வாட்டாக உயர்ந்த போதிலும் தமிழ்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!