சேலம் மாவட்ட மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தேர்வு!
தமிழகத்தில் இந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிக்கான முதல்வரின் விருதை சேலம் மாநகராட்சி பெற்றுள்ளது. இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
சிறந்த மாநகராட்சி:
நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு சார்பிலும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி போன்றவை தேர்வு செய்யப்பட்டு வருடந்தோறும் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் சிறந்த நகராட்சி விருது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதனையொட்டி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் சேலம் மாநகராட்சி ஆணையருக்கு இதற்கான விருது வழங்கப்படும். அதுமட்டுமின்றி ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. வருவாய் வசூல், மனு நீக்கம், சுகாதாரம், மருத்துவ முகாம்கள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பாட்டின் அடிப்படையில் சிறந்த மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க முக்கிய நடவடிக்கை – டிஜிபி அதிரடி!
சிறப்பாக செயல்படும் நகராட்சிகள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி ஆகிய மூன்று பேரூராட்சிகளையும் அரசு தேர்வு செய்துள்ளது. இவற்றிற்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுக்கான தேர்வுக்காக ஒவ்வொரு மாநகராட்சியிலும் ஆய்வு செய்த குழு கடந்த வாரம் சேலத்துக்கு வந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சியில் பொறியியல், வருவாய்த்துறை, சுகாதாரம், நகரமைப்பு பிரிவுகளில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை அரசிடம் கொடுத்தனர்.
Exams Daily Mobile App Download
அதனடிப்படையில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. மாநில அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை முறையாக செயல்படுத்தியதே விருதுக்கு முக்கிய காரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றபோது பாதாள சாக்கடை, 2 ஏரிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அம்மாநகருக்கு அறிவித்தார். மேலும் மாநகராட்சி அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்தத் தொடங்கியது. இப்பணிகள் குறித்த விவரங்களையும் ஆய்வுக் குழு சேகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.