TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 8% வரை சம்பள உயர்வு!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க உள்ளதாக அந்த நிறுவன தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
TCS:
இந்தியாவின் தற்போதைய நிலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறை தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனாவால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மையமாகி விட்டது. இந்த நேரத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையின் தேவை மக்களுக்கு அதிகரித்தது. இதனால் மக்களுக்கு சேவைகளை வழங்க ஐடி துறை ஊழியர்களின் தேவையும் அதிகரித்தது. கிட்டத்தட்ட 400 % அளவில் ஐடி பணியாளர்களுக்கான தேவை அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் இன்றிரவு தெரியும் “பிங்க் மூன்” – ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணாம பாருங்க!
இந்த நிலையில் இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் போன்ற பெரிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அறிவித்தது. புதிதாக கல்லூரி படிப்பை முடித்து வேலை வாய்ப்புகளை தேடி வருபவர்களுக்கு உதவும் வகையில் பிரபல ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை அளித்தது. இந்த நிலையில் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. டிசிஎஸ் (TCS) ஏப்ரல் 11ஆம் தேதி மார்ச் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டது. அதில், டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 7% உயர்ந்து 9,926 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டிசிஎஸ் வருவாய் 16% உயர்ந்து 50,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், டிசிஎஸ் நிறுவனத்தின் டாலர் வருவாய் 14.3% உயர்ந்து 6.7 பில்லியன் டாலராகவும் அதிகரித்துள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் ஊழியர்களுக்கு 6% முதல் 8% சம்பள உயர்வு வழங்கியது. அதேபோல் சம்பள உயர்வு வழங்கவிருப்பதாகவும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை பெறுவதற்கு டிசிஎஸ் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.