TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி 3 நாட்கள் மட்டுமே வேலை!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி 3 நாட்கள் மட்டுமே வேலை!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி 3 நாட்கள் மட்டுமே வேலை!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி 3 நாட்கள் மட்டுமே வேலை!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் 8 சதவீத ஊழியர்கள் மட்டும் வாரம் 3 நாட்களுக்கு அலுவலகம் வந்து பணியாற்றிட உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 முதல் 8 சதவீதம் வரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சம்பள உயர்வு:

இந்தியாவின் தற்போதைய நிலைமையில் தகவல் தொழில் நுட்பத்துறை தீவிர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனாவால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நேரத்தில் ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளும் நடைபெற்று வந்த நிலையில் தகவல் தொழில் நுட்பத்துறையின் தேவை மக்களுக்கு அதிகரித்தது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 400 % அளவில் ஐடி பணியாளர்களுக்கான தேவை ஏற்பட்டது. அப்போது பிரபல ஐடி நிறுவனங்கள் பிரசர்களை பணியில் அமர்த்த முடிவு செய்தது. பொறியியல் பட்டம் பெற்றவர்கள், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது.

Exams Daily Mobile App Download

அதே நேரம் அவர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டது. அதனால் பலரும் ஐடி துறையை தேர்தெடுத்தனர். அந்த வகையில் கடந்த வருடம் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது ஊழியர்களுக்கு 6% முதல் 8% வரை ஊதிய உயர்வு அளித்தது. அதனை தொடர்ந்து 2022-23 ஆம் நிதியாண்டிலும் கடந்த ஆண்டை போலவே 8% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த அறிவிப்பாக 3 நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 2ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மற்ற 2 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து டிசிஎஸ் நிறுவனத்தின் பணிபுரியும் 6 லட்சம் ஊழியர்களில் தற்போது 50000 ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வர உள்ளனர். மற்ற 5.5 லட்சம் ஊழியர்களுக்கு அடுத்தச் சில காலத்திற்கு வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. ஐடி துறையை தவிர்த்து பிற துறைகளில் தங்களது பணியாளர்களை அலுவலகம் வந்து பணி புரிய அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் ஐடி நிறுவனம் மட்டும் இதுவரை ஊழியர்களை அலுவலகம் வர அதிகாரபூர்வ அழைப்பை விடுக்கவில்லை. இந்த நிலையில் டிசிஎஸ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!