தமிழக போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் ஓய்வூதியம் வழங்க திட்டம்!
தமிழகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் அடிக்கடி அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்படும் நிலையில், தற்போது புதிய கோரிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் வழங்க திட்டம்:
மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசின் நிர்ணயத்தின் படி மாத சம்பளம், அகவிலைப்படி உயர்வு மற்றும் இதர பலன்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அரசின் ஊழியர்கள் தான் மக்களுக்கு அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்வதால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நலன் மிகவும் கவனிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களை போலவே ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? 25% ஓய்வூதியம்! அரசு எடுக்கப்போகும் முடிவு!
சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்களின் பல கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், 2016 செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்கப்படும் என, முன்னதாக அரசு அறிவித்திருந்தது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 1998 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணி ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடக் கோரி போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, 2016 முதல் 2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதியக்குழு ஓய்வூதியம் வழங்குவது பாரபட்சமானது எனக் கூறி, 2016ஆம் அண்டுக்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் அந்த அடிப்படையில் ஓய்வூதியமும், நிலுவைத் தொகையும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.