தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இளங்கலை படிப்பில் இலவச கல்வி! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இளங்கலை படிப்பில் இலவச கல்வி! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இளங்கலை படிப்பில் இலவச கல்வி! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இளங்கலை படிப்பில் இலவச கல்வி! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் ஏழை மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக 2010ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள திட்டம், இலவச கல்வி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இதில் இணைந்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலவச கல்வி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். தாக்கம் குறைந்து வந்தாலும் நிதி நெருக்கடியில் இருந்து பலரும் மீள முடியாமல் உள்ளனர். இதனால் தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் நிலை தான் பரிதாபம். கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் இருப்பதால் உயர் கல்வியை கைவிடும் சோகம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மிகவும் ஆறுதலை அளித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம். நடப்பு 2022- 23 ஆம் ஆண்டு கல்வியாண்டில் இதன் இணைப்பு கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதாவது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஏழை மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு படிக்க உதவும் வகையில், பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 2022 – 2023 கல்வியாண்டின் இலவச இளங்கலை படிப்புகளில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமையல் சிலிண்டருக்கு இனி மானியம் கிடையாதா ? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவில்லாதவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!