தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று கூட்டுறவு துறை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சட்டப் பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ரேஷன் கடை தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடை
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போது அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனை தொடர்ந்து தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் 18ஆம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் திமுக அரசின் வாக்குறுதிகளும் அத்துடன் நலத்திட்டங்களும் இடம் பெற்றிருந்தது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதிஒதுக்கீடுகளும் இடம் பெற்றுள்ளது.
L&T நிறுவனத்தில் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து கடந்த மாதம் முதல் கட்ட பட்ஜெட் விவாதம் நடைபெற்றது. அடுத்ததாக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் ஒவ்வொரு துறை மீதான மானியக் கோரிக்கைகள் பற்றிய விவாதங்கள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தற்போது கூட்டுறவு துறை தொடர்பான மானிய கோரிக்கை நடைபெற்றது. தமிழகத்தில் முழு நேர ரேஷன் கடைகளில் 6 ஆயிரத்து 162 கடைகளின் கட்டிடங்கள், 773 பகுதி நேர கடைகளின் கட்டிடங்கள் இன்னும் கட்டப்படவில்லை.
தமிழகத்தில் இனி ஆன்லைன் மூலம் கட்டிடம் கட்ட அனுமதி – அரசு அறிவிப்பு!
மேலும் தற்போது 150 கடைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்துடன் இதில் தற்போது கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பேசியதை பற்றி விரிவாக பார்ப்போம். இவர் கூறியதாவது, தமிழகத்தில் 6000க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் வாடகை கட்டிடத்தில் தான் இன்னும் செயல்பட்டு வருகின்றன. அத்துடன் 700க்கும் மேற்பட்ட பகுதி நேர நியாய விலைக் கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அதனால் ஆண்டுக்கு 500 நியாயவிலை கடைகளை கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.