தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை? வெளியான ஹேப்பி நியூஸ்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதே போல வரவிருக்கும் 20223ம் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
பொங்கல் பரிசு:
தமிழகத்தில் கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு திமுக தலைமையிலான அரசு வெல்லம், முந்திரி, திராட்சை,பச்சரிசி, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், கடலை பருப்பு, மிளகாய் தூள், புளி, மல்லி தூள், மிளகு, ரவை, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், கோதுமை மாவு, உப்பு என 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை இலவசமாக வழங்கியது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல மாநிலங்களுக்கும் ஒரு முன்னோடி திட்டமாக இருந்து வந்தது. ஆனாலும் கடந்த முறையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கவில்லை என்பது பலரின் புகாராக இருந்து வந்தது. இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு தற்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பரவும் கண் நோய் – அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை! மருத்துவர்கள் எச்சரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
அதாவது தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2022ம் ஆண்டு தற்போது நிறைவடையும் நிலையில் அடுத்து பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.