தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இடம் மாறுதல் தேதி நீட்டிப்பு!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள், பரஸ்பரம் இடம் மாறி கொள்வதற்கான விண்ணப்ப தேதி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இருப்பினும் தற்போது காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
ஆசிரியர் இடம் மாறுதல் தேதி நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. நோய் தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து பள்ளிகள் கடந்த பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதனால் மாணவர்களுக்கு விரைவில் பாடத்திட்டங்களை முடிக்க ஆசிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக செய்து வருகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். கடந்த கல்வி ஆண்டில், கொரோனா காரணமாக, கவுன்சிலிங் நடத்தவில்லை. இந்த ஆண்டு கவுன்சிலிங் ஆன்லைன் வழியில் நடந்தது.
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 58 ஆயிரம் பேர் தகுதி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல், பணி நிரவல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தன. முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், நீதிமன்ற வழக்கு மற்றும் நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஏற்கனவே பணி இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், வரும், 28ம் தேதி தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, மார்ச் 1ம் தேதி புதிய இடத்தில் பணியில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், ஆசிரியர்கள் தங்களுக்குள் பரஸ்பரமாக பேசி இடங்களை மாற்றி கொள்ளும், மனமொத்த மாறுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் ஆசிரியர்கள், பரஸ்பரம் இடம் மாறி கொள்வதற்கு ஆன்லைன் பதிவு கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதற்கான விண்ணப்ப பதிவு கால அவகாசம் நேற்று முன்தினம் முடிந்தது. இருப்பினும் தற்போது 21ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப பரிசீலனைக்கு பின், வரும் 26ம் தேதி மாறுதல் வழங்கப்படுகிறது. இதையடுத்து, அலகு விட்டு அலகு மாறுவதற்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதி நடக்க உள்ளதாக, பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.