தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் 5% அகவிலைப்படி உயர்வு?
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு:
நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் என அரையாண்டுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும்.அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு மத்திய அரசால் அறிவிக்கப்படும். 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 31%ல் இருந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34%ஆக அதிகரித்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில்,வரும் ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு , 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம் இரண்டுமே அதிகமாக உள்ளதால் விலைவாசி உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்காக காத்து கொண்டு உள்ளனர்.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை (ஜூன் 22) முதல் தொடக்கம்!
தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 த்தில் இருந்து 31% ஆக 1.1.2022 முதல் தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழக்கத்தை விட அதிகமாக உயர்த்தப்படலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி வழக்கமாக 3% உயர்த்தப்படும். அதிகபட்சமாக 6% வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு ஊழியர்கள் கூறுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 4%-5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 4-5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.