தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4 நாட்கள் தொடர் விடுமுறை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 4 நாட்கள் தொடர் விடுமுறை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 4 நாட்கள் தொடர் விடுமுறை!

தமிழகத்தில் நாளை தமிழ் வருட புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புனித வெள்ளியை முன்னிட்டு நாளை மறுநாளும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 17ம் தேதி வார விடுமுறை என்பதால் சனிக்கிழமையும் அரசு விடுமுறை அளித்துள்ளது. அதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அரசு விடுமுறை:

தமிழகத்தில் சித்திரை 1ம் தேதி அன்று வழக்கமாக தமிழ் வருட புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதனால் தமிழ் வருட புத்தாண்டை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நாளை தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து புனித வெள்ளியை முன்னிட்டு நாளை மறுநாளும் அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் சனிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதியும் விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – மாதம் ரூ.8000/- உதவித்தொகை

மேலும் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று கிரிவலம் செல்வார்கள். இதில் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் ஏற்படக்கூடுமோ என்று திருவிழாவை நடத்தாமல் இருந்தனர். தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் 16ம் அன்று கிரிவலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? வாட்டி வதைக்கும் இணையதளம்!

அதனால் 16ம் தேதி அன்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்தடைந்துள்ளன. இந்த கோரிக்கையை ஏற்ற அரசு 16ம் தேதி சனிக்கிழமை அன்றும் அரசு விடுமுறை என்று அறிவித்துள்ளது. அதன்படி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவர்கள். அதனால் சென்னையில் இருந்து கோவை, சேலம், நாகை, வேளாங்கண்ணி, தஞ்சை, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அத்துடன் 16ம் தேதி அன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!