தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் மாதம் 1,000 ரூபாய்!

0
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் மாதம் 1,000 ரூபாய்!
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் மாதம் 1,000 ரூபாய்!
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் மாதம் 1,000 ரூபாய்!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி எழுந்த நிலையில், மகளிருக்கான மாத உரிமைத்தொகை ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்று திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

மாதம் 1,000 ரூபாய்:

தமிழகத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக, கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது தலைமையிலான அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

Exams Daily Mobile App Download

இருப்பினும், திமுக அரசு அமைந்து ஓராண்டு ஆகி உள்ள நிலையில், தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இதுவரை குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத் தொகையை திமுக அரசு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், நிதி நிலைமை மேம்படும் போது இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் திமுக ஓராண்டு ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா? முதல்வர் முக்கிய அறிவிப்பு!

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிய நிலையில் முதல்வர் அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில், இதுவரை 320 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை 1,000 ரூபாய் வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி வருகின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் தர மாட்டோம் என எங்கேயும் சொன்னது கிடையாது. இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் நிச்சமாக மற்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். மேலும் பெட்ரோல் விலை எப்படி ஏறுகிறது என எனக்குப் புரியவில்லை. நான் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால் பெட்ரோல் விலை ஏற்றத்தில் மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!