தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 2021- 2022 ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுக்கான தேதியை பள்ளி கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. இந்த அறிவிப்பு அடிப்படையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பொதுத் தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் குறித்து முக்கிய அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்தை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுக்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் ,12 ஆம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11 ஆம் வகுப்புக்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

அதே போல 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது இதற்கான முடிவு ஜூன் 17 ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல்,12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 7 ஆம் தேதி வெளியாகிறது. பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகளில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – ஏப்ரல் 29 ஆம் தேதி சிறப்பு முகாம்!

இந்நிலையில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்றும், குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ,2021 – 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான வினாக்கள் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தில் (குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும். பாடத்திட்ட விவரங்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!