தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை – மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14, 15, 16 மற்றும் 17 என தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை:
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 14 ஆம் தேதி அதாவது சித்திரை 1 அன்று தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதைப் போல இந்த ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி புனித வெள்ளி தினமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை பின்பற்றி வருகின்றனர். மேலும், ஏசுவின் துன்பங்களை நினைவுகூரும் நாளாக கிறிஸ்தவர்கள் இந்த புனித வெள்ளி நாளை அனுசரித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்தவ சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பத்தை நினைத்து இத்தகைய புனித வெள்ளியை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இந்த புனிதவெள்ளி வரும் வெள்ளிக்கிழமை வருவதால் ஏப்ரல் 15 அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. புனித வெள்ளி ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் சண்டே வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனிக்கிழமையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 14, 15, 16 மற்றும் 17 என தொடர்ந்து நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விடுமுறை முடிந்து ஏப்ரல் 18 ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.