அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி உயர்வு! நிலுவைத்தொகையும் கிடைக்கும்! சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஹரியானா மாநில அரசு அகவிலைப்படி 4% உயர்த்தியுள்ளது.
அகவிலைப்படி:
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. முதலில் மத்திய அரசானது விலைவாசி, ஏஐசிபிஐ குறியீட்டின் தரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும். அதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்துகிறது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு தீபாவளி சிறப்பு அறிவிப்பாக அகவிலைப்படியை அதிரடியாக 4% உயர்த்தியது.
Follow our Instagram for more Latest Updates
தொடர்ந்து அடுத்தடுத்து பல மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. நேற்று உத்திரபிரதேச அரசு 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து இன்று ஹரியானா அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. இதனையடுத்து அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது.
நகைபிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தீபாவளியை முன்னிட்டு திடீரென தங்கம் விலை குறைவு!
Exams Daily Mobile App Download
இந்த 38% அகவிலைப்படி 2022 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் நவம்பர் மாதத்தில் கிடைக்கும் என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. தற்போது வரவுள்ள பண்டிகை தினத்தை முன்னிட்டு வரும் இவ்வாறான அடுத்தடுத்த அறிவிப்புகள் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.