தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைனில் கல்வி கற்க முடியாத ஏழை மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் `இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் 2020ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் மற்றும்
தேர்வுகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகமாக பாதிப்படைந்தது. மேலும் பல்வேறு தடுப்பு விதிமுறைகள் மூலம் கொரோனா பரவல் கடந்த வருடம் முதல் குறையத் தொடங்கின. இதன் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதுவரை சந்தித்திராத ஒரு பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக நாம் மீண்டு வருகிறோம். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அதிக இழப்பைச் சந்தித்தவர்கள் பள்ளிக் குழந்தைகளே என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக, முழுவதும் மாநில அரசின் நிதியில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டம் (27-10-2021) அன்று தொடங்கப்பட்டது. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தன்னார்வலர்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவர்களாக, ஆசிரியர்களுக்கும், பள்ளிகளுக்கும், சமூகத்திற்கும் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் 19 பேச்சுப்போட்டி!

தமிழகத்தில் அமலில் இருந்த கொரோனா விதிமுறைகள் தற்போது திரும்ப பெறப்பட்டு உள்ளது. பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பேசிய கல்வி அமைச்சர், கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரி செய்யும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து வீட்டில் முடங்கி இருந்த மாணவர்களின் பள்ளி கல்வி மட்டுமல்லாது மாணவர்களின் பொது அறிவையும் சீர் செய்யும் விதமாக இந்த திட்டம் மீண்டும் ஆறு மாதங்கள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!