பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் – இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அறிவிப்பு!
கொரோனாவின் காரணமாக தற்போது அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கியதன் காரணமாக வரும் கல்வியாண்டில் எந்த சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி இயங்காது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிகளும் இயங்கவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக தான் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இதன் பின்பு தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்ததும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் நடத்த முடியவில்லை. பள்ளிகள் ஆரம்பமான பிறகே மாணவர்களுக்கு பாதிக்கு மேல் பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டன.
Exams Daily Mobile App Download
மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 35% வரைக்கும் பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு காலம் தாழ்த்தி தான் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் அனைத்து சனிக்கிழமையும் வகுப்புகள் நடைபெற்றது. சனிக்கிழமை விடுமுறை அளிக்க கோரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருமே வேண்டுகோள் விடுத்தனர். இதுமட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் இழந்த கல்வியை மீட்டெடுக்க பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறைக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் மே 13 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை விடுமுறை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி செயல்பட்ட காரணத்தினால் தற்போது வரும் புதிய கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருமே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.