பொங்கல் பரிசில் மாற்றம் – வெளியான அசத்தல் அறிவிப்பு.. ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி!
தமிழகம் மற்றும் புதுவையில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் புதுச்சேரி அரசு தற்போது பொங்கல் பண்டிகை பரிசில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
ரொக்க பணம்:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் பரிசுத்தொகுப்பு ஆகியவை வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. கடந்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது திமுக தலைமையிலான அரசு ரொக்க பணத்திற்கு பதிலாக பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் மளிகை என மொத்தம் 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது.
Follow our Instagram for more Latest Updates
இந்த திட்டம் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அதே போல தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியிலும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கடந்த ஆண்டு வேட்டி, சேலை உள்ளிட்ட 10 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை அரசு வரவுள்ள 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசில் மாற்றம் செய்துள்ளது.
தமிழக மக்களே மிகக்கவனம்…. இன்று 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
Exams Daily Mobile App Download
அதாவது வரும் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு புதுவையில் ரேஷன் கார்டில் பெயர் உள்ள 18 வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக ரூ. 500 ரொக்க பணமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அக்.24 தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உரிய பணம் அந்தந்த குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்