ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய திட்டம் அறிமுகம்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய திட்டம் அறிமுகம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - புதிய திட்டம் அறிமுகம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய திட்டம் அறிமுகம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. விரைவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கடை:

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் பெற்று வருகின்றனர். அவ்வப்போது தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்ததது. இதற்கு பதிலளித்த அரசு விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கு மத்தியில் ரேஷன் கடைகளை விரிவுபடுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 35,323 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இதில் 10,279 பகுதி நேர கடைகளாகும். இந்த கடைகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் அமைச்சர் சக்கரபாணி மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் ரேஷன் கடைகளில் கூடுதல் வசதிகளை செய்து தர தற்போது ஆலோசனை நடந்து வருகிறது. அத்துடன் ரேஷன் கடையின் இட வசதியை பொறுத்து அரிசி, கோதுமை ஆகிய பொருட்களை தொடர்ந்து அனைத்து மளிகை பொருட்களையும் விற்க முயற்சி நடந்து வருகிறது.

இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு? மத்திய அரசு விளக்கம்!

அதன்படி இனி சூப்பர் மார்கெட்டுகளில் விற்கப்படுவது போல ரேஷன் கடைகளை தேர்தெடுத்து ரேஷன் பொருட்களை பாக்கெட் போட்டு விற்க உள்ளனர். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியிலும், ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 20 முதல் 25 ரேஷன் கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு நிரந்தர கட்டிடம் கட்டி கொடுக்கவும், அனைத்து ரேஷன் கடைகளின் முகப்பு வாயில் ஒரே வடிவத்தில் ஒரே கலரில் இருக்கும் வகையில் கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!