ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – எளிதாக இணைய சேவை! மத்திய அரசின் புதிய திட்டம்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - எளிதாக இணைய சேவை! மத்திய அரசின் புதிய திட்டம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - எளிதாக இணைய சேவை! மத்திய அரசின் புதிய திட்டம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – எளிதாக இணைய சேவை! மத்திய அரசின் புதிய திட்டம்!

நாட்டில் ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

WIFI வசதி:

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் ரேஷன் கார்டு மூலம் மாதந்தோறும் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வருடம் நிலவிய கொரோனா பேரிடருக்கு மத்தியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இலவசமாகவும், கூடுதலாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வந்தனர். இதனால் ஊரடங்கு காலத்தில் மக்கள் உணவு பற்றாக்குறை இன்றி வாழ்ந்தனர். தற்போது மத்திய அரசு ரேஷன் கடைகளில் வைபை வசதி கொண்டு வர முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதன் மூலம் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் செல்போன், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றை எடுத்து வந்து இணைய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். பெரும்பாலும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இணையதள வசதி கிடைப்பதில்லை. அதனால் பி.எம் வாணி திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளை இணைய சேவை வழங்கும் பொது தரவு மையமாக மத்திய அரசு மாற்றவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் வைஃபை பயன்படுத்துவோர் இதற்காக குறிப்பிட்ட தொகையை ரேஷன் கடைக்கு செலுத்த வேண்டும். இதன்மூலம் ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கும் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN TET தேர்வர்களின் கவனத்திற்கு – நாளை மாதிரி தேர்வு பற்றிய அறிவிப்பு!

தமிழகத்தில், சுமார் 35,000 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த ரேஷன் கடைகளில் 10,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் பகுதி நேர கடைகளாகச் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் சில வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. அதனால் முதல் கட்டமாக இத்திட்டத்தை அதிக இட வசதியுடன் கூடிய சொந்த கட்டிடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளில் செயல்படுத்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் வாழும் மக்கள் அதிவேக இன்டர்நெட் வசதி பெற முடியும் மேலும் இது அரசின் திட்டம் என்பதால் கட்டணமும் மிகவும் குறைவாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!