தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி புதுசா இந்த பொருளும் கிடைக்கும்!
தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் கிடைக்கப் போகும் புதிய பொருள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரேஷன் கார்டுதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழக தலைமைச் செயலகத்தில் கடந்த மே. 23 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 லட்சம் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில், ரூ.227 கோடி மதிப்பிலான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தொகுப்பு நிலங்களாக உள்ள தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு நிலத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, விவசாயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ள நாங்குநேரி-திசையன்விளை சாலையில் உள்ள இறைப்புவாரி, சங்கனாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் அரசு செயலாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து கூறியது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு – இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் இந்த திட்டத்திற்காக கிராமங்கள் தேர்வு செய்யப்படும். நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு 47 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் பனை மரத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விரைவில் நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் இலக்கு வைக்கப்பட்டு பனை விதைகள் விதைக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.