தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – பேரவையில் அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இனிமேல் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார்.
ரேஷன் கடைகள்:
தமிழகத்தில் உள்ள நடுத்தர மக்களின் வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரேஷன் கடைகள் ஆகும். மேலும் இந்த ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தி மு க ஆட்சி வந்து தற்போது பல சிறப்பான திட்டங்களை செய்து வருகிறது. மேலும் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. தேர்தல் முடிந்த பின்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு!
இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் ஒரு சாதனையை படைத்து உள்ளது திமுக. இதனால் திமுக தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வெற்றியை சிறப்பிக்கும் வண்ணம் முதல்வர் முன்னரே அறிவித்த படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை வெகு விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில் சென்ற மாதம் 18 ஆம் தேதி சட்டசபையில் நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் சார்பில் 2022-2023 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனால் அன்று முதல் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஷாக் அறிவிப்பு – விரைவில் புதிய விதிகள்!
இந்நிலையில் தற்போது சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்து உள்ளார். அது என்னவென்றால், 2 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வருங்காலத்தில் ஆவின் பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் வாக்குறுதியின்படி பால் விலை குறைக்கப்பட்டது. சேலம் கருமந்துறையில் உயர் மரபியல் பயனுள்ள கிடேரிகள் வளர்க்கும் திட்டம் ரூபாய் 6 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.