ரயில்வே ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளி போனஸ் அறிவிப்பு – மத்திய அரசு ஒப்புதல்!
ஆண்டுதோறும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆயுத பூஜைக்கு முன்னதாகவே போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பு தாமதமாக வெளியாகி இருக்கிறது.
போனஸ் அறிவிப்பு
மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த செப் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதில் 4% அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அதனை தொடர்ந்து மத்திய அரசு, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு தற்போது ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆண்டுதோறும் ரயில்வே ஊழியர்களுக்கு ஆயுத பூஜைக்கு முன்னதாக போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன் படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனஸ் தொகையாக வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார். இந்த அறிவிப்பின் காரணமாக சுமார் 11.27 லட்சம் அரசிதழ் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவதால் அரசிற்கு கூடுதலாக 1,732 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்!
Exams Daily Mobile App Download
கடந்த 2021 ஆம் ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அதே போல 78 நாட்களுக்கான ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.72,000 கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்