ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – சேவைகள் மீண்டும் துவக்கம்!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மீண்டும் ரயில்கள் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் கோட்டங்களிலும் விரிப்புகள் வழங்கும் முறை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சற்று குறைய ஆரம்பித்ததும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் வீட்டிலிருந்தே எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மேலாண்மை பயிற்சி தொடக்கம்!
தற்போது தடுப்பூசிகள் மற்றும் அரசின் கூடுதல் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதனால் மீண்டும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நேரத்தில் கடந்த 31ம் தேதியுடன் இந்தியாவில் விதிக்கப்பட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டது. அதனால் ரயில்வேத்துறை மீண்டும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை இயக்கி வருகிறது.
Post Office இல் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வீட்டு வாசலில் வங்கி சேவைகள்!
அதனை தொடர்ந்து தற்போது விரிப்புகள் வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த விரிப்புகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்புயுள்ளதால் ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விரிப்புகள் வழங்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.