தமிழகத்தில் உள்ள ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் பயணித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.
மெட்ரோ ரயில்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவி இருந்த காரணத்தால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக உள்ள தொழில்நுட்பங்கள் நிறுத்த பட்டது. அதில் முக்கிய ஒன்றாக ரயில்வே துறை. அதனை தொடர்ந்து மக்கள் ரயில் பயணம் இல்லாமல் சிக்கி தவித்து வந்தனர். இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்தால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து வழி போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
ExamsDaily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அம்மாவட்ட மக்களுக்கு இந்த ரயில் வசதி மிகவும் வசதியாக இருந்து வருகிறது. மேலும் இதனால் மக்கள் மிகவும் எளிதாக அவரவர் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். அதனை தொடர்ந்து, தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அருமையான அறிவிப்பு – ஊதிய உயர்வுக்கான சூத்திரத்தில் மாற்றம்!
அதன்படி, மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பயணித்த பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து உள்ளனர். அதனை தொடர்ந்து, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் மற்றும் 30 நாட்களுக்கு விருப்பம் போல் பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை (2,500 + 50) போன்ற பல பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த மாதத்திற்கான குலுக்கல் முறை மே 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், பரிசு விவரங்களை தெரிந்து கொள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகுமாறு கூறப்பட்டு உள்ளது.