Post Office இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – IVR வசதி அறிமுகம்!
போஸ்ட் ஆபீஸில், சேமிப்பு திட்டம் அல்லது பல்வேறு வகையான சிறுசேமிப்பு திட்டங்களை தொடங்கியவர்கள், அல்லது தொடங்க போகிறவர்கள், ஏடிஎம் கார்டுக்கு அப்ளை செய்தவர்கள், ஏடிஎம் பின்னை மாற்ற நினைப்பவர்கள் என பல்வேறு சேவைகளுக்காக காத்திருக்கும் நபர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை போஸ்ட் ஆபீஸ் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புதிய வசதி:
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. பணத்திற்கு பாதுகாப்பு, வட்டி, வரிச்சலுகை என மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து சிறப்பு சலுகைகளும் பொதுமக்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இதனால் சிறுசேமிப்பு திட்டங்கள், முதலீடு திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்களில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். மேலும் தபால் துறையும் சிறந்த சேவையை புரிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அருமையான செய்தியை தபால் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி பல்வேறு சேவைகளுக்கு தபால் அலுவலக கிளைகளுக்கு அலைய வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இது குறித்து தபால் துறை சார்பில் திருப்பூர் உட்பட அனைத்து கோட்ட தபால் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கிறது. இதையடுத்து சாமானிய மக்கள் கூட, தபால் துறை சேமிப்பு திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம், ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்களுக்கு ஐந்து வருட கால சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல வகையான திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. மேலும் வங்கிகளை போலவே தபால் அலுவலகத்திலும் ATM கார்டு உள்ளிட்டவை பெற முடியும்.
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள் உயர்வு? விரைவில் அறிவிப்பு!
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், தபால் அலுவலகத்திற்கு நேரில் செல்வதை தவிர்க்கவும், பயனாளர்கள் பயன் பெறும் வகையில் IVR என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது தொலைபேசி வாயிலான குரல் மூலம் பதிலளிக்கும் வாடிக்கையாளர் (IVR) சேவை ஆகும். இந்த சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடு, ஏடிஎம் கார்டை தடை செய்தல், புதிய கார்டுகள் பெறுதல் மற்றும் பிபிஎஃப், என்எஸ்சி போன்றவற்றில் பெறப்பட்ட வட்டி போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் வாடிக்கையாளர் PPF, NSC, சுகன்யா சம்ரித்தி அல்லது மற்ற திட்டங்களைப் பற்றிய விரிவான தகவல்களைப் பெற தனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து இந்திய அஞ்சல் சேவையின் இலவச எண்ணான, ‘18002666868’ என்ற நம்பரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.