ஓய்வூதியதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ்!
ஓய்வூதியதாரர் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வாழ்நாள் சான்றிதழை வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளும்படியான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாழ்நாள் சான்றிதழ்:
தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஓய்வூதியம் ஓய்வூதியதாரர் உயிரோடு இருக்கும் வரைக்கும் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ஓய்வூதியதாரர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு சான்றாக வாழ்நாள் சான்றிதழை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், இந்த வாழ்நாள் சான்றிதழை ஒப்படைப்பதற்காக மாவட்ட கருவூலங்களுக்கு நேரில் செல்ல வேண்டும்.
விரைவில் திருமண பந்தத்தில் இணையும் “பாரதி கண்ணம்மா” அருண் – வைரலாகும் தகவல்!
ஆனால், தற்போது ஜீவன் பிரமன் திட்டத்தின் மூலமாகவே ஓய்வூதியதாரர் அஞ்சல் துறை டிஜிட்டல் லைப் சான்றிதழ் மூலமாகவே உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொள்ள முடியும். இதற்காக ஓய்வூதியதாரர் தங்களது பகுதியில் உள்ள தபால்காரரிடம் ஆதார் எண், கைபேசி எண், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஓய்வூதிய விவரங்கள் அனைத்தையும் கொடுத்து கைரேகையை பதிவு செய்துவிட்டாலே டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ்களை சில நிமிடங்களில் சமர்ப்பிக்க முடியும்.
Exams Daily Mobile App Download
மேலும், அஞ்சல் துறை டிஜிட்டல் லைப் சான்றிதழ் திட்டம் கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே தற்போது வரைக்கும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு டிஜிட்டல் வாழ்யூதிய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சல் துறை மூலமாக டிஜிட்டல் லைப் சான்றிதழ் பெற செப்டம்பர் மாதம் வரைக்கும் கால அவகாசம் இருக்கிறது என்பதால் விரைவில் வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.