ஓய்வூதியதாரர்களுக்கு அரசு வெளியிட்ட ஹாப்பி நியூஸ்.. இன்று கடைசி நாள் – முக்கிய தகவல்கள் வெளியீடு!
இந்தியாவில் அரசு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு குறைகளை கேட்டறிந்து அவற்றை சரி செய்யும் நோக்கில் கடந்த 2ம் தேதி குறைதீர்ப்பு முகாம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய பென்ஷன் மற்றும் பென்சனர் நலத் துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறைதீர்ப்பு முகாம்:
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத்தொகையை பெற விரும்புபவர்கள் ஆண்டுதோறும் ஓய்வூதியர் நல அலுவலகத்தில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழானது ஓய்வூதியம் பெறும் நபர் உயிருடன் இருப்பதை உறுதி செய்கிறது.
Exams Daily Mobile App Download
மேலும் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதில் சில பிரச்சனைகள் இருப்பதாக ஓய்வூதியதாரர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் அரசு சார்பாக ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான குறைதீர்ப்பு முகாம் கடந்த 2ம் தேதி நடைபெற தொடங்கியது. இதன் மூலம் கடந்த 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 3150 ஓய்வூதியம் தொடர்பான குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மத்திய ஓய்வூதிய நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விரைவில் தமிழ் வழி மருத்துவ கல்லூரி – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்!
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து 4200 குறைகளை தீர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குறைகள் குறித்து மற்ற துறைகளுடன் ஆலோசிக்க சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பென்சன் சார்ந்த விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகளை தளர்த்துவதற்காக 30 சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது என்று ஓய்வூதிய நலத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த குறை தீர்ப்பு முகாமானது இன்றுடன் முடிவடையவுள்ளது.