Mobile Banking செய்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி செலவே இல்ல! வந்தது புதிய மாற்றம்!
நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு யுபிஐ உடன் கிரெடிட் கார்டை இணைத்து பரிவர்த்தனை செய்யும் வசதியை வழங்கியுள்ளது. இது குறித்து முக்கிய தகவலை இப்பதிவில் காண்போம்.
UPI & கிரெட் கார்டு:
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் மக்கள் ஒரு பொருளை வாங்கும் போது அதற்கான கட்டணத்தை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் மூலமாகவும், யுபிஐ வாயிலாகவும் செலுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் கிரெடிட், டெபிட் தொடர்பான விதிகளில் ரிசர்வ் வங்கி பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
ஏனெனில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பண மோசடிகள் அதிகரித்து வருவதால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 1ம் தேதி Card on file tokenization முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் கிரெடிட்,டெபிட் கார்டு விவரங்களை கார்டுதாரர் தவிர பிற யாரும் அறிய முடியாது. இதனால் விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஆன்லைன் வணிக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரத்தை சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு அரசு வெளியிட்டுள்ள ஜாக்பாட் அறிவிப்பு – இனி ரேஷன் கடையில கூட்டம் அலைமோதும்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் யுபிஐ உடன் கிரெடிட் கார்டை இணைத்து பரிவர்த்தனை செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் பண பரிவர்த்தனை செய்தால் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என்று NPCI கூறியுள்ளது. மேலும் ரூ.2000க்குள் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்