Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் சம்பள உயர்வு!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஊதிய உயர்வு குறித்த முழு விவரத்தை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு:
உலகின் தலைசிறந்த தொலைநுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மைக்ரோசாப்ட் நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில், திறமையான ஊழியர்களை தக்க வைக்க அவர்களது ஊதியத்தை உயர்த்த இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஐடி நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள சம்பள உயர்வு, விடுமுறைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த முடிவை அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
தங்களது ஊழியர்கள் பணியில் இருந்து ராஜினாமா செய்வதை தடுக்கும் விதமாக இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, நமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருவதால் நம் திறமை வாய்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து அதிக டிமாண்ட் உள்ளது. தலைமை குழுவை சேர்ந்தவர்களின் செயல்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் உண்டு. அதற்காக நான் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே உங்களில் ஒவ்வொருவரிலும் நாங்கள் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – குறைந்த கொரோனா நோய்த்தொற்று பரவல்!
மேலும் உலகளவில் தங்களது மெரிட் பட்ஜெட்டை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ள நாதெள்ளா, ஒவ்வொரு நாட்டிலும் சேகரிக்கப்படும் தரவு விவரங்களின் அடிப்படையில் இது மாறுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொது மேலாளர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் பிற உயர் நிர்வாகிகளுக்கு இந்த சம்பள உயர்வு பொருந்தாது எனவும் நாதெள்ளா தெரிவித்திருக்கிறார்.