தமிழகத்தில் நகைக்கடன் பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இந்த நிபந்தனைக்குட்பட்ட தகுதியான நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக அமைச்சர் பெரியசாமி பேட்டியளித்ததை பார்ப்போம்.
நகைக்கடன்:
தமிழக சட்டசபையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் இதில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் இந்த முறைகேடுகளுக்கு வங்கி அதிகாரி உட்பட சிலர் இதற்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால் தள்ளுபடி பெற தகுதியான நபர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்த அனைவரின் விவரங்களும் நிபந்தனைக்கு உட்பட்டனவா என்று பரிசீலனை செய்யப்பட்டது. இதில் விண்ணப்பித்திருந்த 48 லட்ச பேரில் 13 லட்ச பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்ட வாரியாக நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் இதில் தங்களுக்கு தகுதி இருந்தும் நகைக்கடன் தள்ளுபடி பெயர் பட்டியலில் குறிப்பிடப்படவில்லையெனில் அவர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Uber நிறுவனத்தில் 500 இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு – டிசம்பருக்குள் ஆட்சேர்ப்பு!
அத்துடன் பட்டியல் வெளியான நாளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகுதியானவர்களாக இருந்தும் நகைக்கடன் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்தன. இது குறித்து மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பெரியசாமி கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை தகுதியானவர்களுக்கு முழுமையாக நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும் நகைக்கடன் பெற தகுதி இருந்தும் இன்னும் நகைக்கடன் பெறாதவர்கள் புகார் அளித்தால் இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளார்.