ஐடி ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம்! உலக நாடுகள் பரிசோதனை!
உலக நாடுகள் சில ஐடி நிறுவனங்களில் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பணியாளர்களின் செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பிற நாடுகளும் 4 நாட்கள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசோதித்து வருகின்றனர்.
4 நாட்கள் வேலை செய்யும் திட்டம்:
உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று அதனால் விதிக்கப்பட்ட ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகள் காரணமாக ஐடி துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய நிறுவனங்கள் அனுமதி வழங்கியது. தற்போது வரை பெரும்பாலான ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது உலக நாடுகள் சில ஐடி ஊழியர்களுக்கு வேலை நாட்களை குறைத்துள்ளது. தற்போது வாரத்தில் 5 நாட்கள் வேலை, 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வேலை நேரமும் வழக்கத்தில் உள்ளது. இந்த முறை மாற்றப்பட்டு சில நாடுகளில் ஐடி துறையில் 4 நாட்கள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. இன்னும் பல நாடுகள் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில் கலிபோர்னியா மாகாணம் வாரத்தில் 4 நாட்கள் தான் வேலை திட்டத்திற்கு விரைவில் சட்டம் இயற்றவும் உள்ளது.
ஷிவ் நாடார் முதல் ராம் ஸ்ரீராம் வரை – தமிழகத்தின் டாப் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு!
சிஸ்கோ மற்றும் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களும் 4 நாட்கள் வேலை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிசோதித்து வருகின்றனர். சிஸ்கோ நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை கடந்த ஆண்டு முதல் கொண்டு வந்தது. 28 வாரங்கள் தொடர் பரிசோதனைக்குப் பிறகு இந்த புதிய வேலை திட்டத்துக்கு நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. பெல்ஜியம், ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ், ஸ்வீடன், ஸ்பெயின் போன்ற நாடுகள் புதிய முறையை பரிசோதித்து வருகின்றனர். ஐஸ்லாந்தில் 2015ம் ஆண்டு 4 நாட்கள் வேலை திட்டம் கொண்டு வரப்பட்டது. இது நல்ல முடிவை அளிப்பதாக தெரிய வந்துள்ளது.