ஐடி நிறுவன ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 25% முதல் 30% வரை சம்பளம் உயர வாய்ப்பு!
இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்த நிதியாண்டில் ஐடி நிறுவன ஊழியர்கள் அவர்களின் திறமையை பொறுத்து 25% முதல் 30% வரைக்கும் கூட சம்பளம் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சம்பள உயர்வு:
கொரோனா காலகட்டமான இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே ஐடி நிறுவனங்கள் அனைத்தும் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. இது மட்டுமல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தல் விகிதமும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்துதான் வேலை பார்த்து வந்தனர். தற்போது ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் அடுத்தடுத்த ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
ஐடி நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்டி வருவதால் சிங்கப்பூரில் தொழில்நுட்பத் துறையின் சம்பளம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல் நிதித்துறையில் பணியமர்த்தல் விகிதமும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஒரு ஆண்டில் மட்டுமே 15 முதல் 30 சதவீதம் வரை சம்பளம் அதிகரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது டேட்டா அனலிஸ்ட், டேட்டா இன்ஜினியர், பேக் எண்ட் டெவலப்பர்ஸ், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை சம்பளம் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் – நிதியமைச்சர் விளக்கம்!
மேலும் சிங்கப்பூர் மற்றும் பிற முக்கிய பொருளாதார நாடுகளில் ஒரு ஊழியர் மட்டுமே இரண்டு அல்லது மூன்று வேலைவாய்ப்புகளை பெற வாய்ப்புள்ளதாகவும் அவர்களின் திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஐடி நிறுவனங்களில் தேவைகள் அதிகமாக இருப்பதால் வேலை வாய்ப்புகளும் பெருகி வருகிறது. பட்டதாரிகள் இந்த வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.