ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ் – புதிய வட்டி விகிதம் அறிவிப்பு!
Fixed Deposit சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை உயர்த்தி ICICI வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களையும் இப்பதிவில் காணலாம்.
வட்டி விகிதம் உயர்வு:
இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் தங்களின் வருமானத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க தொடங்கினர். அதன்படி தற்போது பெரும்பாலானோர் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கிகளில் அல்லது அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வந்தனர். அத்துடன் வங்கிகளில் முதலீடு செய்வதால் குறைந்த நாட்களில் அதிகமான லாபத்தை பெற முடியும். மேலும் தற்போது பல வங்கிகளில் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும் தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை ICICI வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 2 கோடி ரூபாய்க்கு உட்ப்பட்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது எத்தனை நாட்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
இதில் 290 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு வகையான காலங்களுக்கு வட்டி விகிதம் குறைந்தபட்சமாக 2.50% முதல் 5.75% வட்டி விகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 முதல் 29 நாட்கள் வரையிலான சேமிப்பு திட்டத்திற்கு 2.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதே போல் 30 முதல் 90 நாட்கள் வரையிலான சேமிப்பு திட்டத்திற்கு 3% வட்டி விகிதமும், 91 முதல் 184 நாட்கள் வரை 3.5% வட்டி விகிதமும், 185 முதல் 289 நாட்கள் வரை 4.40% வட்டி விகிதமும், 290 முதல் 1 வருட காலத்திற்கு 4.50% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இதனை இன்று முதல் அமல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.