அமலுக்கு வந்த அகவிலைப்படி உயர்வு – அரசு ஊழியர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பின் படி, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைக்கு அகவிலைப்படி உயர்வு புதுவை அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
38% DA உயர்வு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழக்கமாக அகவிலைப்படி உயர்வு குறித்தான அறிவிப்பை மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கும். சமீபத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்து முடிந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டின் முக்கிய விவகாரங்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த முறை அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர், கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் 3 மாதங்கள் நீடிக்கப்படுவது, ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவை தொகை போன்றவை குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது. அதேபோல், 1 ஜூலை 2022 முதல் 31 டிசம்பர் 2022 வரையிலான மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்தும் அறிவிக்கப்பட்டது.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hall Ticket வெளியீடு!!
Exams Daily Mobile App Download
அதன்படி, இதுவரை கடைசியாக மத்திய அரசு ஊழியர்கள் பெற்று வந்த 34% அகவிலைப்படி உயர்வானது ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு 38% ஆக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவின் படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுவை அரசு ஊழியர்களுக்கும் இந்த 38% அகவிலைப்படியானது அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்