அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிரடியாக உயரும் ஊதியம் – முழு விவரம் இதோ!

0
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிரடியாக உயரும் ஊதியம் - முழு விவரம் இதோ!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிரடியாக உயரும் ஊதியம் - முழு விவரம் இதோ!
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அதிரடியாக உயரும் ஊதியம் – முழு விவரம் இதோ!

நாடு முழுவதும் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். அதன் பலன்களும் ஊழியர்களுக்கு சென்றடையும் நிலையில், 8வது ஊதியக் கமிஷன் கொண்டுவரப்பட்டால் ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஊதிய உயர்வு:

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் படி பலன்களை பெற்று வருகின்றனர். இருந்த போதிலும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் தான் கிடைக்கிறது என ஊழியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் 8வது ஊதிய குழு கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் 8வது ஊதிய குழு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மத்திய பணியாளர் அமைப்பு இது குறித்து கூறுகையில், தற்போது 7வது ஊதிய குழுவில் குறைந்தபட்ச ஊதிய வரம்பு ரூ.18 ஆயிரமாக இருப்பதாகவும், இதில், ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு இன்கிரிமென்ட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த காரணி 2.57 மடங்கு உள்ளது. ஆனால் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரைக்கப்பட்ட 3.68 என இருந்தால் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல் 8வது ஊதியக் கமிஷன் அமலுக்கு வந்தால் ஃபிட்மென்ட் ஃபேக்டர் 3.68 மடங்கு ஆவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

இருந்தாலும் 8வது ஊதிய குழுவின் படி ஊழியர்களின் ஊதியம் 44% ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமே ரூ. 26,000 என இருக்கும். ஆனால் 7வது ஊதிய குழுவிற்கு பின் 8வது ஊதிய குழு இருக்காது எனவும், அதற்கு பதிலாக அரசு ஊழியர்களின் சம்பளத்தை தானாக உயர்த்தும் ஒரு முறை அரசு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் DA 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால், சம்பளத்தில் தானாக திருத்தம் செய்யப்படும். இந்த முறை அமலுக்கு வந்தால் 68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!