அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 3% அகவிலைப்படி உயர்வு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஜூன் மாதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 3 % உயர்த்தப்பட்டு 34 % ஆக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக 2022ம் ஆண்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வந்தது. அதன்படி அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக அதிகரிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் இவை ஜனவரி முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த கட்டமாக மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் டிஏ உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்படும் என்று தகவல் வந்துள்ளது. ஜூலை மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகிறது. அம்மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5 தவணைகளாக உயர்த்தபட்டது.
இந்திய விமானப்படையில் அட்டகாசமான வேலைவாய்ப்பு 2022 – AFCAT நுழைவுத்தேர்வு விவரங்கள்..!
இதில் ஏற்கெனவே இரண்டு தவணைகள் வழங்கப்பட்டுவிட்டது. அடுத்தாக மூன்றாவது தவணையை வழங்குவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த தொகை வழங்கப்பட்டால் சுமார் 17 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி தொடர்ந்து ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பள உயர்வு வழங்கப்படும். மேலும் குரூப் C பிரிவில் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும், அதற்கு கீழான பிரிவுகளுக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையில் சம்பளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.