FD திட்ட பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உயர்வடைந்த வட்டி விகிதம்!
அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிலும் வைப்பு நிதி திட்டங்கள் உள்ளது. ஆனால், ஒவ்வொரு நிறுவனமும் வேறு வேறு விகிதத்தில் வட்டி அளித்து வருகிறது. இவற்றில் மக்களுக்கு அதிக லாபத்தை தரும் திட்டங்கள் தான் வரவேற்பை பெற்று வருகிறது.
வைப்பு நிதி திட்டம்:
மக்கள் அதிக லாபத்தை தரும் பாதுகாப்பான திட்டங்களில் தான் தங்கள் பணத்தை முதலீடு செய்ய நினைக்கின்றனர். இதனால் பாதுகாப்பான திட்டங்களை நோக்கி செல்கின்றனர். பாதுகாப்பாக பணத்தை முதலீடு செய்வதற்கான சிறந்த வழி வங்கிகளில் அல்லது அஞ்சலகத்தில் வைப்பு நிதி கணக்கு தொடங்குவது தான். ஒவ்வொரு வங்கிகளும், குறிப்பிட்ட கால அளவுகளுக்கு குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயித்து வழங்கி வருகின்றன.
இவற்றில் தங்களுக்கு எது உகந்ததோ அவற்றை மக்கள் தேர்வு செய்து பயனடைகின்றனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டியினை உயர்த்தியுள்ளது. இதனால் வங்கிகளுக்கும் சில மாற்றங்கள் உள்ளது. அதன்படி, இந்தியன் வங்கி அக்டோபர் 4ம் தேதியான நேற்று முதல் வைப்பு நிதி திட்டத்திற்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
Exams Daily Mobile App Download
இந்தியன் வங்கியின் வட்டியானது 0.05% முதல் 0.50% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. பல திட்டங்களின் வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்லை. வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்காக சில சிறப்பு திட்டங்களும் உள்ளது. இதனால் தங்களுக்கு எதில் அதிக பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று மக்கள் முழுமையாக அறிந்து கொண்டு பயனடைய அறிவுறுத்தப்படுகிறர்கள்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்