கோவை மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்கள்!

0
கோவை மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்கள்!
கோவை மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்கள்!
கோவை மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்கள்!

தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் யாரும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

போராட்டம்:

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று திமுகவினர் சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்கள். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். அனைத்து துறையினருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போல ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

கடந்த வருடம் நிலவிய ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய பங்கு வகித்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் போது குறுகிய காலத்தில் பொருட்களை வழங்கினார்கள். இக்கட்டான சூழலில் மக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்றும் இதனை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுப்பது உண்மை – சுகாதாரத்துறை செயலர் ஷாக் ரிப்போர்ட்!

அதன்படி ஜூன் 7 முதல் 9 வரை 3 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இன்று 2வது நாளாக தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கோவையில் ரேஷன் கடை ஊழியர்கள் யாரும், இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதில், எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தை, பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!