மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – குடும்ப ஓய்வூதியத்தில் புதிய மாற்றங்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் சில மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி தற்போது புதிய மாற்றத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஊழியர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் பொதுவாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இம்முறை 4% வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குடும்ப ஓய்வூதியத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த புதிய விதிமுறையின்படி, மத்திய அரசின் ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தில் இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்ட் ஊடுருவலால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு குடும்ப பென்சன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய விதிமுறைகளின்படி மத்திய அரசு ஊழியர் பணிக்காலத்தின்போது தொலைந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு பென்சன் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொழில்நுட்ப (IT) நிறுவனங்களுக்கு புதிய சிக்கல் – ஆய்வு தகவல் வெளியீடு!
மேலும் இதில், காணாமல் போன ஊழியரின் குடும்பத்திற்கு சம்பள நிலுவைத் தொகை, பணிக்கால பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் காணாமல் போன அரசு ஊழியர் ஓய்வு காலத்திற்குள் மீண்டும் திரும்ப வரும் போது, அந்த ஊழியர் தொலைந்து போன காலத்தில் அவரது குடும்பத்துக்கு செலுத்தப்பட்டு வந்த பென்சன் தொகை அவரின் சம்பளத் தொகையில் பிடித்தம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய விதிமுறையில், மத்திய அரசு ஊழியர் தொலைந்து 7 ஆண்டுகள் கழித்த பிறகு அல்லது அவர் இறந்துவிட்டார் என உறுதிப்படுத்த பிறகு அவரின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டது.