CBSE பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 48 நாட்கள் கோடை விடுமுறை!
இந்தியாவில் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 4ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டது. அதன் படி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாநிலங்களாக படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் மத்திய கல்வி வாரியம் 10 ,12 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வை நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் படி நடப்பு கல்வி ஆண்டில் ஆண்டு பொதுத் தேர்வுக்கு பதில், இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் முதல் பருவத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த கட்ட பருவத்தேர்வு கடந்த 26ம் தேதி தொடங்கியது.
ஏப்ரல் 30 முதல் ஜூன் 5ம் தேதி வரை கோடை விடுமுறை – உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவிப்பு!
இத்தேர்வானது ஜூன் 14ம் தேதி வரை இத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 நாட்கள் கோடை விடுமுறை வரவுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.